Saturday, September 25, 2010

ஷிர்க்கின் தீய விளைவுகள்...

தௌஹீதுக்கு (ஏகத்துத்துக்கு) முற்றிலும் எதிரான செயலாக கருதப்படுவது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும்.
                 
                    அல்லாஹ்வை வணங்குவதோடு, வணங்குவதற்கு இன்னொரு கடவுளை கொண்டு வருதல் அல்லது வழிப்படுவதற்கு வைத்து அவனது படைப்புகளாலும் செய்ய முடியும் என கருதுவது அல்லது அல்லாஹ் அல்லாத சக்திகள் மீது அன்பு செலுத்துவது, உதவி தேடுவது போன்றன இணை வைத்தலை குறிக்கின்றன.

     அல்லாஹ்வுக்கு இணை வைப்பது மிக பாரதூரமான குற்றமாகும். ஏனைய குற்றம் புரிவொருக்கு கிடைக்கும் மன்னிப்பு கூட இணை வைப்பவர்களுக்கு அறவே கிடையாது. அல்லாஹ் தன் திரு மறையில் கூறுகிறான்,

"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்"[திருக்குர்ஆன் 4:48]
                
இணை வைப்பவர்கள் ஒரு போதும் சுவர்க்கம் செல்ல முடியாது. இதனை பின்வரும் அல் குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.

"எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை" [திருக்குர்ஆன் 5:72]
         
இணை வைத்தல்" எனப்படுகின்ற இப் பெரும் பாவத்தை செய்வோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந் நல்லறங்களும் அழிந்து போய் விடும்.
'
'நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்"" (என்பதுவேயாகும்)" [திருக்குர்ஆன் 39:65]         


ஒரு சிலர் இன்று ஷிர்க் என அறியாத நிலையில் சில பாவங்களில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக மந்திரித்தல், நூல் வளையம் கட்டுதல்,  தாயத்து அணிதல் என்ப‌வற்றை குறிப்பிடலாம். இவை சிறிய வகையான ஷிர்க்கில் அடங்கினாலும், பெரும் பாவங்களை விட பாரதூரமான குற்றாமாகவே கருதப்படுகின்றன.

"எவராயினும் ஒரு துஆ கூட்டை அல்லது தாயத்தை அணிந்துக் கொண்டால் தன் நாட்டத்தை அல்லாஹ் பூர்த்தி செய்வதை அவர் ஒரு போதும் காணமாட்டார். எவரேனும் ஒரு கடல் சங்கை தொங்கவிட்டுக் கொண்டால் அவர் ஒரு போதும் ஓய்வும், சாந்தியும் பெறமாட்டார்" என நபி (ஸல்) கூறியதாக உக்பா பின் ஆமிர் தெரிவித்தார். ஆதாரம் அஹ்மத் (இப்னு ஹம்பல்)


நபி (ஸல்) அவர்களின் இன்னுமொரு ஹதீஸின்படி, "யாரேனும் ஒரு தாயத்தை அணிந்து கொண்டால், அவர் ஒரு ஷிர்க்கான காரியத்தை செய்து விட்டார்", என்று கூறியிருக்கிறார்கள்.


கையில் (மந்திரம் ஓதிய) ஒரு நூலை கட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட ஹுதைபா (ரலி) அவர்கள் அதனை வெட்டியெரிந்து [12:106] குர்ஆன் ஆயத்தை ஓதிக் காட்டியதாக இப்னு அபி ஹாதிம் அறிவிக்கிறார்கள்.


அல்லாஹ் தன் திரு மறையில் குறிப்பிடுகிறான்,

                                       "அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால் அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக் கூடியவையா? அல்லது ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால் அவனுடைய அருளை அவை தடுத்துவிடக் கூடியவையா? என்று நீர் கேட்பீராக. அல்லாஹ் எனக்கு போதுமானவன். (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறுவீராக" [திருக்குர்ஆன் 39:38]
                 
இன்று வயிற்றுப்பிழைப்பிக்கு வழியில்லாதவர்கள் அல் குர்ஆனிய வசனங்களை வைத்து "மந்திரம்" எனும் பெயரில் வியாபாரம் நடத்துகின்றனர்.  இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை பின்வரும் ஹதீஸ் கண்டிக்கிறது.

குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள். (நபிமொழி, அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அசாகிர்)

ஏமாறுபவர்கள் உள்ள வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
எனவே எத்தகைய பயனையும் தராத, பாவத்தையும் அல்லாஹ்வின் கோப‌த்தையும், தீய விளைவுகளையும் மட்டுமே பெற்றுத்தரக்கூடிய இத்தகைய ஷிர்க்கான விடயங்களை விட்டு விலகி நடக்க அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வானாக!!!
ஆமீன் !!!

                  

சிரிக்க ... சிந்திக்க‌ !!! (நாகூர் உம்மாவும், நாகம்மாவும்)

நாகூர் உம்மா :  ஆ.... நாகம்மா ,கையில் ஒரு செம்போட எங்க போறப் பயணம்?
கோயிலுக்கு போறன் நாகூர் உம்மா.


நாகம்மா :  அது சரி உங்க கையில என்னது தேங்காய் எண்ணெய் போத்தல் ?


நாகூர் உம்மா :  ஓ.... அதுவா நான் கூட நம்ம அவுலியா கபுரடிக்கு தான் போறன்.


நாகம்மா :   நான் கோயிலுக்கு பால் கொண்டு போற மாதிரி தான் நீங்களும் தர்காவுக்கு எண்ணெய் கொண்டு போறியல். என்றாலும் சொல்றேன்னு கோவிக்காதீங்க நாகூர் உம்மா ,நம்ம மதத்துல உள்ள மாதிரி உங்கல்ல எதுவுமே இல்ல தானே ?


நாகூர் உம்மா :  (இஸ்லாமிய உணர்வு (?) கொண்டவராக!) என்ன? உங்கள மாதிரி நம்ம கிட்ட இல்லையா? யார் சொன்னது? உங்களுடைய மத்தத்தில் உள்ளவற்றை எடுத்து விடுங்க பார்ப்போம். எது எங்களிடம் இல்லை என்று நானும் பார்த்து விடுகிறேன்.


நாகம்மா :  நாங்கள், நட்ட கல்லை சிலையாக வணங்குறோமே!
உங்களுடைய‌ மதத்தில் அப்படி இல்லையே ?


நாகூர் உம்மா :  ஏன்? நாங்கள்,படுக்கின்ற கல்லை கபுராக வைத்து வணங்குறோமே!!


நாகம்மா :  நாங்கள் தேர் இழுக்கிறோம். நீங்க என்னவாம் ?


நாகூர் உம்மா :  ஏன்? எங்கள் நாகூரில் சந்தனக் கூடு இழுக்குறார்களே!


நாகம்மா :  நாங்கள் சிலைகளுக்கு மாலை போட்டு பாலாபிசஷேகம் செய்றோமே!


நாகூர் உம்மா :  ஓ.... இவ்வளவு தானா? நாங்க‌ளும் கபுருக்கு புடவை போத்தி சந்தானாபிஷேகம் செய்கிறோமே!


நாகம்மா :  ஆ...ஆ... நம்ம கலாச்சாரத்துல வில்லுப்பாட்டு கதாகாலட்சேபம் என்று நடத்துவோமே..!


நாகூர் உம்மா :  நாங்க ராத்திபு நடத்துவோமே..!


நாகம்மா :  நாங்க திருநீரை நெற்றியில் பூசுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் சந்தனத்தை கலுத்தில் பூசுவோமே!


நாகம்மா :  நாங்கள் திருமணத்தில் தாலி கட்டுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் கட்டுகிறொமே!


நாகம்மா :  எங்கள் மதத்தில் பக்திப்பாடல் இருக்கே!


நாகூர் உம்மா :  ஏன்? எங்களுக்கு தான் இஸ்லாமிய கீதம் இருக்கே!


நாகம்மா :  நம்மிடம் தீட்சை உள்ளதே!


நாகூர் உம்மா :  நம்மிடமும் முரீது பை அத் உள்ளதே!


நாகம்மா :  நாங்கள் நல்ல நாள் , சகுனம்,ராகு காலம் , சோதிடம் பார்ப்போமே!


நாகூர் உம்மா :  இவ்வளவு தானா ? நாங்களும் தான் பால் கிதாபுல இதெல்லாம் பார்க்குறோமே!!


நாகம்மா :  நாங்கள் கழுத்துல தாயத்து கட்டுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் கழுத்துல துஆ போடுறோமே!


நாகம்மா :  நம்ம ஆட்கள் பெயர் சூட்டு விழா காதணி விழா பூப்புனித நீராட்டு விழா பிற‌ந்த நாள் விழா அஸ்திவாரம் நிலை போட விழா புது வீடு கிரகப் பிரவேஷம் எல்லாம் செய்வாங்களே!


நாகூர் உம்மா :  இப்போ நீங்க சொன்னதில் ஒன்று விடாம நாங்களும் தான் செய்றோமே!!


நாகம்மா :  அதுவும் அப்படியா.....ஆ .... நாங்க சாவு வீட்டுல திதி திவசம் என்று நடத்துவோம்.


நாகூர் உம்மா :  நாங்களும் கத்தம் ஓதி சாப்பாடு கொடுப்போம்.


நாகம்மா :  நாங்க துவஜாரோகனம் என்று கொடி ஏற்றுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் தீன் முஹியத்தீன் என்று கொடி ஏற்றுவோமே!


நாகம்மா :  நமக்கு மயில் இறகு புனிதமானதே!


நாகூர் உம்மா :  எங்க தர்காவுலயும் மயிலிறகு உள்ளதே!


நாகம்மா :  நாங்க கோயில்ல பல மெட்டுல பஜனை பாடுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் பல மெட்டுல மௌலீது ஓதுவோமே!


நாகம்மா :  நாங்க நம்ம தெய்வங்கள் போல வருஷா வருஷம் கோயில்ல      அன்ன தானம் கொடுப்போமே!


நாகூர் உம்மா :  நாங்களும் நம்ம அவுலியாக்கள் போல வருஷா வருஷம் கந்தூரி கொடுப்போமே!


நாகம்மா :  அப்பாடா இதுக்கு மேலன்னா என்னால அடுக்க முடியாது. நாமன்னா ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள் தான். இப்படி நமக்குள்ள இவ்வளவு ஒற்றுமை இருக்கும் போது நமக்கென்ன கோயில், கபுரடி வேறுபாடு? இன்னக்கி நானும் உங்களோட தர்காவுக்கு வாரன். நாளைக்கி நீங்க‌ என்னோட கோயிலுக்கு வாங்க.... நாம தான் ஒரே மாதிரியானவங்களாச்சே. பிறகு ஏன் வேற்றுமை ?


நாகூர் உம்மா :  !!.........!!.........!!..........?..........??

பரம்பரை பழக்கமே மார்க்கம் என்று கண்மூடி நம்பிக்கையில் ஊறித்திளைக்கும் இஸ்லாமிய அன்பர்களே! உங்கள் பரம்பரை பழக்கங்கள் எங்கிருந்து செய்யப்பட்டவை என்பதை உணர்ந்திருப்பீர்கள். பின் வரும் நபி மொழியை சற்று சிந்திக்கவும்.

"எவன் ஒருவன் மாற்று மத கலாச்சாரத்தில் ஒன்றை தனதாக்குகிறானோ அவன் அந்த மதத்தை சார்ந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."
(ஸஹீஹ் புஹாரி)

Friday, September 24, 2010

முஹாஸபா (சுய விசாரணை)

ஒரு பரீட்சைக்கு தயாராகும் போது அதற்காக எத்தனை எத்தனை முன் ஆயத்தங்கள் மேற்கொள்கிறோம்.சாதாரண பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க, பரீட்சையில் சித்தியடைய எவ்வளவு பெரிய முயற்சி செய்கிறோம்.


ஆனால் இந்த உலகத்தை படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் நம்மை கேள்வி கேட்க இருக்கிறான்.அக் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயாராக உள்ளேனா? அல்லாஹ்வின் பரீட்சையில் நான் சித்தியடைவேனா?எங்களை நாங்களே ஒரு முறை கேட்டு பார்க்க வேண்டும் சகோதர சகோதரிகளே!



இதை தான் உமர் ரழி அவர்கள் "நீங்கள் விசாரிக்கப்படு முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் (முஹாஸபா செய்து) கொள்ளுங்கள். உங்களது செயற்பாடுகள் மறுமையில் நிறுக்கப்படுவதற்கு முன்னர் நீங்களாகவே எடை போட்டுப் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒவ்வொருவரும் ஒருநாளில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எந்தளவு கட்டுப்பட்டு வாழ்ந்தோம், இன்னும் அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட அம்சங்களிலிருந்து எந்தளவு விலகி நடந்து கொண்டோம் என்பது பற்றித் தன்னைத் தானே வினவிக் கொள்வதே "முஹாஸபா" வாகும்.
நபியவர்கள் கூறினார்கள் "ஒரு காலம் வரும், அக்காலத்தில் நரகத்தின் வாயில்களிலிருந்து அழைக்கும் அழைப்பாளர்கள் தோன்றுவார்கள். அவர்களுக்கு சாதகமாக பதிலளிப்பவர்களை அவர்கள் நரகத்தினுள் எறிந்து விடுவார்கள்... "(புஹாரி).

இரவு படுக்கைக்கு சென்றதும், இன்று நான் காலையில் எழுந்ததிலிருந்து படுக்கைக்கு வந்தது முதல் என்ன என்ன செய்தேன்? நன்மையான விடயங்கள் அதிகமாக செய்தேனா? அல்லது தீமையான விடயங்கள் அதிகமாக செய்தேனா? நன்மையான விடயங்கள் அதிகம் செய்திருந்தால் Alhamdhulillah நாளை Insha Allah இதை விட அதிகமான நன்மையான விடயங்கள் செய்வேன் என niyya வைக்க வேண்டும்.அவ்வாறின்றி தீமையான விடயங்கள் அதிகம் செய்திருந்தால், (May Allah Forgive All Our Sins) அல்லாஹ்விடம் தான் செய்த பாவங்களை ஒப்புக்கொண்டு மனமுருகி தெளபா செய்து இனி அத்தகைய பாவங்கள் செய்ய மாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதிப்பூண்டு பாவங்கள் செய்வதிலிருந்து தவிர்ந்து நடக்க முயற்சிப்போம்.


"தனது உள்ளத்தைக் கட்டுப் படுத்தி மரணத்திற்குப் பின்னாலுள்ள வாழ்க்கைக்காக உலகத்தில் செயல்பட்டவர் தான் புத்திசாலியாவர்"(திர்மிதி, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)